நவராத்திரி திருவிழா முடிவு பகுதி 1
அனைவருக்கும் வணக்கம்.
நவராத்திரியை முன்னிட்டு அனைவர் வீட்டிலும் பொதுவாக கொலு வைத்து வழிபடுவது தமிழர்கள் பண்பாடு.
இருப்பினும் பொதுவாக நகரத்தார்கள் வீடுகளில் கொலு வைக்கும் பழக்கம் அந்த நாட்களில் இல்லை என்றாலும்,
சமீப காலங்களாக நம்மில் சில பேர் கொலுவைத்து கொண்டாடி வருகின்றோம்.
இந்த வருடம் நவராத்திரியை முன்னிட்டு கொலு போட்டி ஒன்று நடத்தலாம் என்று நினைத்து அதையும் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே நடத்துவது என்று தீர்மானித்து அதற்கான அறிவிப்பை நமது வெப்சைட்டில் (www.avnsangams.co.in) அதன் விவரங்களை அனைவரும் தெரியும் பொருட்டு வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து உள்ளோம்.
சென்னையிலிருந்து 3 போட்டியாளர்கள் இந்த நவராத்திரி கொலு போட்டியில் கலந்துகொண்டு தங்கள் வீட்டில் வைத்திருந்த கொலு போட்டோவையும் நவராத்திரி கொலு பற்றிய கட்டுரையும் விரிவாக எழுதி அனுப்பி இருக்கிறார்கள்.
போட்டியில் கலந்து கொண்ட 3 பேருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மற்றவர்கள் அடுத்து நடைபெறும் online போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
புதிய முயற்சியாக போட்டியில் கலந்து கொண்டவர்களை நமது நகரத்தார் பெருமக்கள் தேர்ந்தெடுக்கும்படி நமது கழக வெப்சைட்டில் அதற்கான படிவங்களை கொடுத்து இருந்தோம்....
போட்டியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நகரத்தார்கள் போட்டிகளில் கலந்து கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதில் பெரிதும் ஆர்வமுடன் கலந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இதுவரை 48 பேர் ஓட்டு அளித்து உள்ளார்கள் வெற்றியாளர் விவரங்கள் தொடர்ந்து வர உள்ளது. அதுவரை 15 நிமிடங்கள் இடைவேளை....
No comments